சினிமா ஹீரோயின் ஆக களமிறங்கிய விஜய் டிவி சீரியல் நடிகை – வெளியான புகைப்படம்!
விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவர் கன்னட திரைப்படம் ஒன்றில் நாயகியாக நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பு குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
நடிகை ரக்ஷிதா:
விஜய் டிவி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. மற்ற தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பல சீரியல்களை ஒளிபரப்பினாலும் மக்கள் மனதை கவரும் வகையில் விஜய் டிவி சீரியல்கள் மட்டுமே உள்ளது. அதில் ஒன்று தான் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியல். இந்த சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி. அவர் சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக அறிமுகம் ஆனவர்.
ஹேமா, லட்சுமியுடன் சேர்ந்து வெண்பா வெளியிட்ட வீடியோ – இணையத்தில் வைரல்!
தற்போது மிர்ச்சி செந்திலுடன் ஜோடியாக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடிக்கிறார். அந்த சீரியலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் இருந்து அவர் விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் அது குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில் அவர் கன்னட படத்தில் ஹீரோயின் ஆக நடித்து வருவதாக தகவல் வெளியானது.
TN Job “FB Group” Join Now
அவர் அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில படங்களை தற்போது பகிர்ந்துள்ளார். அதில் அவர் சிவப்பு உடையில் ராணி போன்ற கெட்டப்பில் இருக்கிறார். இந்த படத்திற்கு ‘ரங்க நாயக’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிப்பதால் தான் அவர் விஜய் டிவி சீரியலில் இருந்து விலகப் போவதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.