நடிகர் சூர்யாவின் வரி விலக்கு மனு தள்ளுபடி – உயர்நீதிமன்றம் உத்தரவு!
நடிகர் சூர்யா வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு கோரி அளித்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வரி விலக்கு:
தமிழகத்தில் முன்னணி நடிகர்கள் வரி செலுத்துவது குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது. முதலில் நடிகர் விஜய் இங்கிலாந்திலிருந்து வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காருக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளிக்க கோரி வழக்கு தொடர்ந்தார். அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் வாங்கிய காருக்கு நுழைவு வரி செலுத்தவில்லை என்று புகார்கள் எழுந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சூர்யா அவர்களின் வீட்டில் கடந்த 2010ம் ஆண்டில் நடிகர் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.
HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி!
இந்த சோதனைக்கு பிறகு 2007, 2008, 2009 நிதியாண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் அதற்கான வட்டியையும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து சூர்யா தரப்பில் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் வருமான வரித்துறை மேல்முறையீடு தீர்ப்பாயம் 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு செய்தால் வரி விலக்கு அளிக்க வேண்டும் என நடிகர் சூர்யா கூறினார்.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு ஒத்துழைப்பு தராததால் வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் விலக்கு பெற உரிமை இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன் சூர்யா மனுவை தள்ளுபடி செய்தார்.