தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் விவரம் – சேகரிக்க உத்தரவு!
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணிகளை தொடங்குமாறு தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்தியது. தேர்தலுக்கு முன்னதாக அதிமுக அரசு கூட்டுறவு சங்க வங்கிகளில் உள்ள 5 பவுன் அளவிலான நகைக்கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று உத்தரவிட்டது. தொடர்ந்து தேர்தல் நடந்து அதில் திமுக தலைமையிலான அரசின் ஆட்சி அமைந்தது. இருப்பினும், நகைக்கடன் தள்ளுபடி திட்டம் அமல் செய்யப்பட வேண்டியது தமிழக அரசின் கடமையாகி விட்டது.
IPL அப்டேட் – துபாய் பறந்தது தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
இன்றைய தமிழக பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர், முந்தைய அரசு அறிவித்துள்ள நகைக்கடன் தள்ளுபடி ஆணையினால் அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுளதாகவும், இதற்காக முதல் கட்டமாக ரூ. 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுளதாகவும் தெரிவித்தார். இருப்பினும், நகைக்கடன் பெற்றவர்கள் குறித்து உரிய ஆய்வு செய்யப்பட்ட பின்னர் தான் திட்டத்தை அமல்படுத்த முடியும் என்று கூறியுள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி மற்றும் அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகள் அனைத்திற்கும் அறிக்கை ஒன்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்களால் அனுப்பப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த அறிக்கையில் மார்ச் 31, 2021 வரை கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகையை ஈடாக வைத்து கடன் பெற்றவர்களின் விவரங்கள் அனைத்தும் சேகரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் ஆதார் எண் மற்றும் குடும்ப விவரங்கள் அனைத்தும் சேகரிக்கவும், தங்கத்தை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் இந்த விவரங்கள் அனைத்தையும் சென்னை மண்டல பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளர் கையொப்பமிட்டு பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.