தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பாடத்திட்டங்கள் குறைப்பு – ஆணையர் ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் ஆலோசனை நடத்தி உள்ளார்.
பாடத்திட்டங்கள் குறைப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இந்த நிலைமையை சரி செய்ய முதற்கட்டமாக பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால், இந்த ஆண்டு தேர்வுகளை நடத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – OPS கோரிக்கை!
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆசிரியர்கள் எந்த நேரமும் சந்தேகம் தீர்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகளை திறப்பது குறித்து அரசு முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்க மத்திய அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, தமிழகத்திலும் நடப்பு கல்வியாண்டில் பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் பாடத்திட்டங்களை குறைப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆசிரியர்கள், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் லதா உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.