செப்டம்பர் 1ம் தேதி 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதை அடுத்து ஆகஸ்ட் 16ம் தேதி 9 முதல் 12ம் வகுப்புங்களுக்கும், செப்டம்பர் 1ம் தேதி 6 முதல் 8ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்க அனுமதி அளித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
உத்தரபிரதேசத்தில் கொரோனா பரவலை கண்காணிக்க மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுரேஷ் கன்னா மற்றும் மருத்துவ கல்வி அமைச்சர் ஜெய் பிரதாப் சிங் ஆகியோர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் தொற்று பாதிப்பு குறித்து அனைத்து ஆய்வுகளையும் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் முன்னதாக 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து கொரோனா 2ம் அலை பாதிப்புகள் அதிக அளவில் இருந்த காரணத்தால் பள்ளிகள் மூடப்பட்டது.
சென்னை சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு – போலி செயலிகளில் முதலீடு!
தற்போது பாதிப்பு குறைந்துள்ள மற்ற மாநிலங்களில் உயர் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் உத்தரபிரதேச மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக ஆகஸ்ட் 16ம் தேதி 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கு மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக முதல்வர் ஆதித்யநாத் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரி வளாகத்தில் தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்து 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி போட அறிவுறுத்தியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில், தற்போது மாநிலத்தில் 27 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவ கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். இதனால், முதல்வர் அடிப்படை கல்வி கவுன்சிலின் கீழ் உள்ள பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறையை தொடங்க உத்தரவிட்டுள்ளார். மேலும், மாநிலத்தில் கொரோனா பரவல் நிலையை ஆராய்ந்த பிறகு செப்டம்பர் 1ம் தேதி 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.