விஜய் டிவியின் பிரபல சீரியல்களுக்கு விரைவில் எண்ட் கார்டு – ரசிகர்கள் வருத்தம்!
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த இரண்டு ஹிட் சிரியல்களான ஈரமான ரோஜாவே மற்றும் அன்புடன் குஷி தொடர்கள் விரைவில் முடிவடைய உள்ளதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
விஜய் டிவி சீரியல்கள்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்கள் மக்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளது. பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், ராஜா ராணி 2 சீரியல்கள் TRPயில் முன்னணியில் உள்ளது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவரும் வகையில் இந்த சீரியல்களின் கதைக்களம் அமைந்துள்ளதால் அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் ரசிகர்களின் ஆதரவை பெற்ற இரண்டு சீரியல்கள் தற்போது முடியப் போகிறது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 20ம் தேதி மொஹரம் பண்டிகை – தலைமை காஜி அறிவிப்பு!
அவை ஈரமான ரோஜாவே மற்றும் அன்புடன் குஷி சீரியல்கள் தான். இந்த இரண்டு சீரியல்களும் இந்த வாரத்துடன் முடிவடைய உள்ளது, இந்த இரண்டு சீரியல்களும் கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் காட்சியை நெருங்கி விட்டது. இந்த சீரியல்கள் வருகிற வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து இந்த சீரியல்களின் இடங்களை நிரப்ப இரண்டு புதிய தொடர்களை விஜய் டிவி அறிமுகம் செய்துள்ளது.
TN Job “FB Group” Join Now
நம்ம வீட்டு பொண்ணு, தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியல்கள் வருகிற ஆகஸ்ட் 16 முதல் ஒளிபரப்பாக உள்ளது. இரு வேறு கதைக்களம் கொண்ட இந்த சீரியல்கள் மக்கள் மத்தியில் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரண்டு டாப் சீரியல்கள் முடிவதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.