TNUSRB காவலர் 2ம் கட்ட உடற்தகுதி தேர்வு – 442 பேர் தேர்ச்சி! 52 பேர் தகுதி நீக்கம்!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் (TNUSRB) சார்பாக இரண்டாம் நிலை காவலருக்கான உடல் தகுதித்தேர்வு நடத்தப்பட்ட நிலையில் இளைஞர்கள் சிறப்பாக பங்காற்றினார். இதில் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெற்ற தேர்வில் கயிறு ஏறுதலில் 52 பேர் இலக்கை அடைய முடியாததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 442 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உடற்தகுதி தேர்வு:
தமிழக காவல் துறை சார்பாக இரண்டாம் நிலை காவலருக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது. வேலூர் நேதாஜி மைதானத்தில் நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 697 பெண்கள் உள்பட 3 ஆயிரத்து 80 பேர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 1,610 ஆண்களும், 354 பெண்களும் இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுகியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – காலக்கெடு நீட்டிப்பு!
அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட ஆண்களுக்காக 2ம் கட்ட உடற்தகுதி தேர்விற்காக 500 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 498 பேர் கலந்து கொண்ட நிலையில் அவர்களுக்கு கயிறு ஏறுதல், 100 மற்றும் 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்றவை நடத்தப்பட்டது. இதில் பலர் தங்களது முழுத்திறனுடன் கலந்து கொண்டாலும் சிலர் தடுமாறினார்.
TN Job “FB Group” Join Now
வேலூர் சரக டி.ஐ.ஜி. பாபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கயிறு ஏறுதல், 100 மற்றும் 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்றவற்றில் இளைஞர்கள் ஆர்வமாக கலந்து கொண்ட நிலையில் கயிறு ஏறுதலில் பலர் தடுமாறினார்கள். சிலர் சறுக்கி கீழே விழுந்த நிலையில் 52 பேர் இலக்கை தொட முடியாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதுபோல நீளம் தாண்டுதலில் ஒருவரும், ஓட்டத்தில் 3 பேரும் என 4 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தவிர்த்து 442 பேர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.