Tokyo Olympics Wrestling : வெண்கலம் வெல்வாரா தீபக் புனியா? அரையிறுதியில் தோல்வி!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மல்யுத்த வீரர் தீபக் புனியா தங்கப்பதக்கம் பெறுவதற்கான அரையிறுதி வாய்ப்பை நழுவ விட்ட நிலையில், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.
மல்யுத்த போட்டி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் சுமார் 140 நாடுகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கு பெற்று வருகின்றனர். இதில் 79 பதக்கங்களை வென்று சீனா முதலிடத்திலும், 73 பதக்கங்களுடன் அமெரிக்கா 2 ஆம் இடத்திலும், 36 பதக்கங்களுடன் ஜப்பான் 3 ஆவது இடத்திலும் உள்ளது. கடந்த 12 நாட்களாக நடைபெற்று வரும் போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய வீரர்கள் ஒரு வெள்ளி பதக்கத்தையும், ஒரு வெண்கல பதக்கத்தையும் பெற்று தந்துள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களின் DA, DR நிறுத்தி வைப்பு – ரூ.34,402 கோடி மிச்சம்!
அந்த வகையில் 2 பதக்கங்களுடன் இந்தியா ஒலிம்பிக் தரவரிசை பட்டியலில் 64 ஆவது இடத்தில் உள்ளது. மேலும் பல்வேறு போட்டிகள் இன்னும் நடத்தப்பட உள்ள நிலையில் அதிலும் இந்தியாவுக்கான பதக்கங்கள் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒலிம்பிக் போட்டி துவங்கி 13 ஆவது நாளான இன்று (ஆகஸ்ட் 4) உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தீபக் புனியா, ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் 86 கிலோ பிரிவில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் கலந்து கொண்டார்.
TN Job “FB Group” Join Now
இப்போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் உலக சாம்பியன் டேவிட் டெய்லருடன் மோதிய அவர் தங்கம் வெல்வதற்கான வாய்ப்பை இழந்துள்ளார். அதாவது அரையிறுதி போட்டியின் துவக்கத்தில் 10-0 என முன்னிலை வகித்த இந்திய வீரர் தீபக் புனியாவை வீழ்த்தி எதிர்பாராத வெற்றியை டேவிட் டெய்லர் பதிவு செய்துள்ளார். இதை தொடர்ந்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவை சேர்ந்த மல்யுத்த வீரர் தீபக் புனியா, தற்போதைய உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான ஈரானை சேர்ந்த ஹசன் யஸ்தானியுடன் மோதுகிறார்.