அஞ்சல் நிலையத்தில் காப்பீடு முகவர் பணி – குவிந்த பட்டதாரிகள் ஏமாற்றம்!
தற்போதைய நிலவரப்படி பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலை பெறுவதை லட்சியமாக கொண்டுள்ள நிலையில் பி.எல்.ஐ., போஸ்டல் லைப் இன்சூரன்ஸ் ஏஜெண்ட் பணிக்காக இன்று நேர்முகத்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதனை அரசு வேலை என நம்பி பெரும் கூட்டம் கூடியது. ஆனால் அதிகாரிகள் வேலையை பற்றி எடுத்துக்கூறியதும் கூட்டம் கலைந்தது.
காப்பீடு முகவர் பணி:
நாடு முழுவதும் படித்த வேலையில்லாத பட்டதாரிகளால் நிரம்பி வழிகிறது. இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகள் அரசு வேலை பெறுவதற்காக பயிற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் பி.எல்.ஐ., போஸ்டல் லைப் இன்சூரன்ஸ் ஏஜெண்ட் பணிக்காக இன்று நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது என்ற அறிவிப்பின் அடிப்படையில் பட்டதாரிகள் படையெடுத்தனர். மேலும் இதற்கு கல்வித்தகுதி 10ம் வகுப்பு எனவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) 28% அதிகரிப்பு – மாநில அரசு உத்தரவு!
இதையடுத்து இன்று காலை திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தபால் அலுவலகத்தில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகள் குவிந்தனர். தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதனால் பொதுமக்கள் கூடுவதற்கான தடை உள்ளது. திடீரென கூடிய கூட்டத்தால் அதிர்ந்த அதிகாரிகள் இளைஞர்களை நோக்கி சென்று வேலை குறித்து விவரித்தனர்.
TN Job “FB Group” Join Now
இது அரசு வேலை கிடையாது என்றும், இது இன்சூரன்ஸ் முகவர் பணி என்று கூறி ஆட்சேர்ப்பதன் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும் எனவும் வேலை குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இது அரசு வேலை இல்லை என கூறியதும் பலர் கிளம்பி சென்றனர். இதில் சேர விரும்பியவர்கள் மட்டும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும் என அறிவித்த சில நொடிகளில் ஒரு சிலர் தவிர அனைவரும் களைந்து சென்றனர். இது வேலை இன்றி தவிப்போரின் மனக்குமுறலை எடுத்து கூறும் நிகழ்வாக இருக்கிறது.