அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) 28% அதிகரிப்பு – மாநில அரசு உத்தரவு!
ஜம்மு -காஷ்மீர் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் அகவிலைப்படி மற்றும் அடிப்படை சம்பளம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவு ஜூலை 1, 2021 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 01, 2020, ஜூலை 01, 2020 மற்றும் ஜனவரி 01, 2021 ஆகிய மூன்று தவணைகளுக்கான அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்தது. ஜூலை 01, 2021 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய அகவிலைப்படி அடிப்படை ஊதியம் 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்தப்படும் என்று நிதி அமைச்சகத்தின் செலவுத் துறை அலுவலகம் அறிக்கையை வெளியிட்டது. மத்திய அரசின் முடிவுக்குப் பிறகு, மற்ற மாநிலங்களும் ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை தற்போதுள்ள 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாள் மாற்றம் – CBSE அறிவிப்பு!
மேலும், பாதுகாப்பு துறை மற்றும் ரயில்வே துறை பணியாளர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகம் தனித்தனியாக உத்தரவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பல மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான திருத்தப்பட்ட சம்பள உயர்வு குறித்து அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2021 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீர் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) தற்போதுள்ள 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், 50 பைசா மற்றும் அதற்கு மேல் உள்ள பின்னங்களுக்கு அடுத்த அதிக ரூபாய்க்கும், 50 பைசாவுக்கு குறைவான பின்னங்கள் புறக்கணிக்கப்படலாம் என்றும் அதிகாரபூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையை சேர்ந்தவர்களுக்கு அரசியலமைப்பின் பிரிவு 148 (5) இன் கீழ் இந்திய கட்டுப்பாட்டாளர் மற்றும் கணக்காய்வாளர் ஜெனரலுடன் கலந்தாலோசித்த பிறகு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.