தமிழகத்தில் 50,000 சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி – மூன்றாம் அலை முன்னெச்சரிக்கை!
தமிழகத்தில் மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை பணியாக 50,000 சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளதாக இந்தியன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ் (ஐ.ஏ.பி) தெரிவித்துள்ளது.
சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில் அரசு மாநிலம் முழுவதும் தொடர் ஊரடங்கை அறிவித்தது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 35,000 பேர் வரை பாதிக்கப்பட்டனர். மேலும் கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டது. கொரோனா சிகிக்சை மருந்திற்காக நோயாளிகளின் உறவினர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போராடி மருந்து வாங்கி சென்றனர்.
டெல்டா வகை கொரோனா பரவல் – சீனாவில் மீண்டும் ஊரடங்கு அமல்!
மேலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் உரிய நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை உருவாகியது. இந்த நிலையை சமாளிக்க மருத்துவத் துறையில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களின் எண்ணிக்கையை சுகாதாரத்துறை அதிகப்படுத்தியது. அரசின் இந்த முயற்சியால் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் அடுத்த தாக்குதலாக மூன்றாம் அலை கொரோனா வரும். அது குழந்தைகளை தாக்கும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலையை சமாளிக்கும் வகையில் இதுவரை 10,000 செவிலியர்களுக்கும், 3,800 குழந்தைகள் நல மருத்துவர்களுக்கு ஆன்லைன் பயிற்சி மூலம் குழந்தைகளை பாதுகாப்பது, மருத்துவ மேலாண்மை மற்றும் மருத்துவ சாதனங்களை கையாள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அதனை தொடர்ந்து மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் வகையில் கூடுதலாக 50,000 சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளதாக இந்தியன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ் தெரிவித்துள்ளது.