டெல்டா வகை கொரோனா பரவல் – சீனாவில் மீண்டும் ஊரடங்கு அமல்!
சீனாவில் மீண்டும் நாளுக்கு நாள் உருமாறிய வகை கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதால், தொடர்ந்து 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.
ஊரடங்கு அமல்:
2019ம் ஆண்டு இறுதியில் நவம்பர் மாதத்தில் முதன்முதலாக கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது. அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் உலகின் அனைத்து நாடுகளுக்கும் தொற்று பரவி விட்டது. அதிவேகத்தில் பரவிய தொற்றின் விளைவால் பாதிப்புகள் அதிகமாக இருந்தது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் தீவிர கட்டுப்பாடுகளை கடைபிடிக்க தொடங்கியது. நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.
9 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு – மாநில அரசு!
ஒன்றரை ஆண்டுகளாக தொற்றின் தீவிரம் குறையாமல் தொடர்ந்து உருமாறிய வகைகளாக பரவி வருகிறது. உருமாறிய வகை வைரஸ்கள் மிகவும் வீரியமிக்கவையாக உள்ளது. இதனால் தொற்றின் தீவிரத்தையும், பரவலையும் கட்டுப்படுத்த மிகவும் கடுமையான வகையில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சீனாவில் நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
TN Job “FB Group” Join Now
இருப்பினும், சீனாவின் 20 நகரங்களில் உருமாறிய டெல்டா வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சீன அரசு கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் 12 மாகாணங்களில் தீவிர பயண கட்டுப்பாடுகளை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கையாக தொடர்ந்து 3 நாட்களுக்கு உகான் மாகாணத்தின் ஜூஜென் நகரில் ஊரடங்கு உத்தரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகையும் தடை செய்யப்பட்டுள்ளது.