அனுவை கொலை செய்து விடும் அர்ஜுன் – பலவித ட்விஸ்டுகளுடன் “ரோஜா” சீரியல் ப்ரோமோ!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “ரோஜா” சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
“ரோஜா” சீரியல்:
சன் தொலைக்காட்சியில் பல விறுவிறுப்பான கட்டங்களுடன் ஒளிபரப்பாகி வரும் “ரோஜா” சீரியலின் ட்விஸ்டுகளுடன் கூடிய ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அர்ஜுன் மற்றும் இன்ஸ்பெக்டர் செய்யாத தவறிற்காக ரோஜா சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை பொறுக்காமல், அவரை வெளியே கொண்டு வருவதற்கான ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். ஆனால், அர்ஜுனின் மாமா அனு மாடியில் இருந்து கீழே விழுந்த போது எடுக்கப்பட்ட சிசிடிவி பதிவுகளை அழித்து விடுகிறார். இதனால் கோபம் அடையும் அர்ஜுன் அவரை ஆள் வைத்து அடித்து விடுகிறார்.
Paytm நிறுவனத்தில் 20,000 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இங்கு இப்படியாக இருக்க, ரோஜா இருக்கும் அதே சிறையில் தான் செண்பகம் இருக்கிறார். செண்பகம் ரோஜாவை பார்த்து விடுகிறார், ஆனால் ரோஜா அவரை பார்க்கவில்லை. சாக்ஷி அந்த சிறையில் இருக்கும் பலருடன் சேர்ந்து ரோஜாவை அடிக்க திட்டமிடுகிறார். அதே போல் செய்தும் விடுகிறார். இதனை பார்த்து விட்டு கோபம் கொள்ளும் செண்பகம் அவரை தனியாக அழைத்து சென்று அடித்து விடுகிறார். இந்த சூழலில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
TN Job “FB Group” Join Now
அதில், ரோஜாவை சாக்ஷி தனது நண்பர்கள் துணையுடன் ஆட்களை வைத்து தலையில் அடித்து விடுகிறார். இதனால் ரோஜா மயக்கமடைந்து ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிறார். அவருக்கு செண்பகம் ரத்தம் கொடுத்து உதவுகிறார். இதனை இன்ஸ்பெக்டர் அர்ஜுனிடம் தெரிவித்து, ரோஜாவிற்கு எதிரான சதி சிறையில் நடப்பதாகவும், அதனால் அவரை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறுகிறார். பின்னர், அனுவை பார்க்க செல்லும் அர்ஜுன் அவரை கத்தியை வைத்து குத்தி விடுகிறார். இதனை அறிந்து அவரது பாட்டி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்து விடுகிறது.
கற்பனை கறபனையில் தான் பிரேமோ வாழ்கின்றது.அபத்தங்களை அள்ளி தருகிறார்கள்.