தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு விதிக்க திட்டம்? புதிய தகவல்!
தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு தொடர்பாக நடைபெற்ற ஆலோசனையில் மீண்டும் முழு ஊரடங்கு விதிப்பது குறித்து அரசு சிந்தித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு
நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வந்த கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைவதாக ஆறுதல் அடைந்து வரும் சூழலில் புதிய பாதிப்புகள் மீண்டுமாக உயர்ந்து கவலை அளித்துள்ளது. அதாவது இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பதிவு செய்யப்பட்டு கொரோனா 2 ஆம் அலை பாதிப்பானது, சுமார் 40 ஆயிரமாக குறைந்தது. இந்நிலையில் நோய் பரவல் கட்டுக்குள் வர துவங்கியதாக கணிக்கப்பட்டவுடன், மாநிலங்கள் தோறும் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இப்படி இருக்க இந்தியாவில் கடந்த சில நாட்களாக புதிய பாதிப்பு சற்றே உயர்ந்து 42 ஆயிரமாகவும், 44 ஆயிரமாகவும் பதிவாகி வருகிறது.
TNPSC குரூப் 1 தமிழ்வழி பயின்றோருக்கான இடஒதுக்கீடு – விவரங்களை பதிவேற்றம் செய்ய அறிவிப்பு!!
அதாவது நேற்று (ஜூலை 30) ஒரு நாளில் மட்டும் 44,673 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்ச பாதிப்பை பதிவு செய்து வரும் கேரளத்தில் நேற்று 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளா மட்டுமல்லாது ஒடிசா, குஜராத் போன்ற சில வட நாடுகளிலும் புதிய பாதிப்புகள் உயர்ந்துள்ளது. இது கொரோனா 3 ஆம் அலைக்கான ஆரம்பமாக கருதப்படுகிறது. இந்தியாவில் 3 ஆம் அலை அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தாது என கூறினாலும், இவ்வகை பாதிப்புகள் பெருகும் சமயத்தில் அதன் தாக்கத்தை கணிக்க முடியாததாக மாறக்கூடும்.
இதற்கிடையில் தமிழகத்திலும் கொரோனா புதிய பாதிப்புகள் சொல்லக்கூடிய அளவுக்கு நூறாக உயர்ந்து வருகிறது. தமிழகத்திலும் நேற்று (ஜூலை 30) ஒரே நாளில் 1,947 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக சேலம், ஈரோடு, சென்னை, கோவை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் புதிய பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த பாதிப்புகள் இன்னும் உயரக்கூடும் என்று கூறினால் மிகையாகாது. இத்தகைய சூழலுக்கு மத்தியில் மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, சென்னை மாநகரத்தில் மக்கள் அதிகம் கூடும் கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னதாக திரையரங்குகள், பள்ளிகள் திறக்கப்பட கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், கூடுதல் தளர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை. நேற்று (ஜூலை 30) தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக நடத்திய ஆலோசனை கூட்டத்துக்கு முன்னதாக, தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், இங்கும் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு ஆலோசனை செய்ததாகவும், பின்னர் ஒரு மாதம் கழித்து ஊரடங்கு குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என முடிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.