TNPSC குரூப் 1 தமிழ்வழி பயின்றோருக்கான இடஒதுக்கீடு – விவரங்களை பதிவேற்றம் செய்ய அறிவிப்பு!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட குரூப் 1 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ் வழி இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக டி.என்.பி.எஸ்.சி. விவரங்களை கேட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப்-1 முதல் நிலைத் தேர்வு கடந்த ஜனவரி 3ஆம் தேதியன்று நடைபெற்றது. துணை ஆட்சியர் (ஆர்டிஓ), டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிக வரி உதவி ஆணையர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை திறக்க ஆலோசனை – அமைச்சர் விளக்கம்!
சுமார் 1 லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் இத்தேர்வில் பங்கேற்ற நிலையில் முதன்மை எழுத்துத் தேர்வுக்குத் தற்காலிகமாக 3,752 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகளில் மாற்றம் வேண்டும் எனவும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான 20 சதவிகித இடஒதுக்கீடு முறையில் தேர்வு செய்து பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழ் வழி பயின்று குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக டி.என்.பி.எஸ்.சி. விவரங்களை கேட்டுள்ளது. அதன்படி குரூப் – 1 முதல்நிலை தேர்வு எழுதியவர்கள் 1 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்விக்கான சான்றை பதிவேற்ற வேண்டும் எனவும், 11, 12ஆம் வகுப்புகளும் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.