திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதி – மாநில அரசு நடவடிக்கை!
ஆந்திராவில் ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக நாளை முதல் மீண்டும் திரையரங்குகளை திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ரசிகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
திரையரங்குகள் திறப்பு:
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா இரண்டாம் அலையின் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அனைத்து கடைகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டது. மேலும் கோவில்கள், பொழுதுபோக்கு இடங்கள், திரையரங்குகள் போன்றவைகளும் திறக்க அரசு தடை விதித்தது. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுமாறும், கிருமிநாசினிகளை பயன்படுத்தும் படியும் அரசு அறிவுறுத்தி வருகிறது.
தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு – CEO உத்தரவு!
மற்றொரு புறம் கொரோனா தடுப்பூசிகள் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்குகளும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதன் விளைவாக தினசரி பாதிப்புகள் குறைந்து கொண்டே செல்கிறது. இதனால் மாநில அரசுகள் மக்களின் நலன் கருதியும் நாட்டின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டும் தளர்வுகளை அளித்து வருகிறது. முதற்கட்டமாக அத்தியாவசிய கடைகள் திறக்கும் நேரத்தை அதிகரித்தது. அதன் பிறகு படிப்படியாக மற்ற தளர்வுகள் அளித்தது. இந்த தளர்வுகளால் மாநிலங்கள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது.
TN Job “FB Group” Join Now
அடுத்தகட்ட தளர்வுகளாக ஆந்திராவில் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி நாளை ஆந்திர மாநிலம் முழுவதிலும் C சென்டர்களில் உள்ள தியேட்டர்கள் திறக்கலாம் என்றும், திரையரங்குகளில் ரசிகர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. முகக்கவசம் அணிதல், நுழைவுவாயிலில் கிருமி நாசினிகள் பயன்படுத்துதல் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.