தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி வழியாக பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது – அரசு அறிவிப்பு!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், வகுப்புகளை சிறப்பாக நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆசிரியர்களுக்கு விருது:
கொரோனா 2 ஆம் அலை பரவலுக்கு மத்தியில் இந்த கல்வியாண்டும் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கால அட்டவணை வகுக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகளை சிறப்பாக நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கலாசேத்திரா சென்னை வேலைவாய்ப்பு 2021 – பல்வேறு காலிப்பணியிடங்கள் !
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருவதால், பாடங்களை சிறப்பாக நடத்தும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும். மேலும் அரசுப்பள்ளிகளில் பட்டியலினத்தை சேர்ந்த மாணவர்களை அதிகம் சேர்க்கும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
சமையல் போட்டியில் கலந்து கொள்ளும் சந்தியா, கற்றுக்கொடுக்கும் சரவணன் – இன்றைய எபிசோட்!
தவிர தனியார் பள்ளிகளில் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு அரசுப்பள்ளிகளில் இடம் கொடுக்க வேண்டும். கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாடங்களை மாணவர்கள் முறையாக கவனிக்கிறார்களா, ஆசிரியர்கள் பாடங்களை சரியாக நடத்துகிறார்களா என்பதை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.