சமையல் போட்டியில் கலந்து கொள்ளும் சந்தியா, கற்றுக்கொடுக்கும் சரவணன் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் இன்று சமையல் போட்டியில் சந்தியா கலந்து கொள்ள உள்ளார். அதற்கு சரவணன் உதவி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். சிவகாமியும், அவரது கணவரும் சந்தியா நல்ல மனைவியாக நடந்து கொண்டார் என பேசிக்கொண்டிருக்க அதனை பார்த்து சந்தியா சந்தோசப்படுகிறார்.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில் லஞ்சம் கொடுக்காமல் நேர்மையான முறையில் சந்தியா செய்த காரியத்தை பற்றி குடும்பத்தில் அனைவரும் பாராட்டி பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கே வரும் பக்கத்து வீட்டில் இருப்பவர் ஏரியாவில் சிறந்த சமையல் செய்பவர்களுக்கு போட்டி நடக்க உள்ளது. அதில் வருடா வருடம் சிவகாமி தான் வெற்றி பெறுவார். அவரது சமையலை தோற்கடிக்க யாருமே இல்லை. இந்த வருசமும் உங்க குடும்பத்துல யாராச்சும் கலந்துக்கணும்னு சொல்ல, அர்ச்சனா நல்லா சமைப்பானு அவரது கணவன் சொல்கிறார்.
அதான் உன் குடும்பத்துல அர்ச்சனா, சந்தியா சமைக்க இருக்காங்களேன்னு சொல்ல, சந்தியாவா? சந்தியா சமைச்சா யாரும் சாப்பிட முடியாதுனு அர்ச்சனா நக்கல் அடிக்கிறார். நான் இந்த போட்டியில் கலந்து கொண்டு கண்டிப்பாக வெற்றி பெறுவேன் எனக்கு நம்பிக்கை இருக்குனு சொல்கிறார். என்ன சமைக்க போறான்னு கேட்க சாப்பாடு சமைக்க வேண்டாம் ஸ்வீட் ஏதாவது சமைங்கனு சரவணன் சொல்கிறார். சந்தியா சரவணனை சமைக்க சொல்லித்தர சொல்கிறார்.
பாக்கியாவிற்கு புதிய வண்டி வாங்கி தரும் கோபி, வருத்தத்தில் எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
கிணத்தடியில் சிவகாமி தனது கணவரிடம் பேச, லஞ்சம் கொடுக்காமல் சந்தியா செய்தது ரொம்ப நல்ல செயல், நீங்க லட்சம் கொடுத்தால் நீங்க செய்தது தப்பாக போய்விடும் என்று சொன்னாலே அப்பவே அவ நல்ல மனைவியா நிரூபிச்சுட்டா என்று சொல்லி சந்தோசப்படுகிறார். அதனை மறைந்து நின்று சந்தியா கேட்டு சந்தோசப்படுகிறார். அமெரிக்காவில் உள்ள தனது அண்ணனிற்கு போன் செய்து நடந்ததை சொல்கிறார். சந்தியாவின் அண்ணி உனக்கு சமைக்க சமையல் புக் வாங்கி தரவா என்று கேட்க, அதான் சரவணன் இருக்காரே என சொல்லி சந்தோசப்படுகிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.
“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!