முத்துராசை தான் கொன்றதாக மகாவிடம் ஒத்துக்கொள்ளும் மாயன் – இன்றைய “நாம் இருவர், நமக்கு இருவர்” எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று டிஎஸ்பி கார்த்தி நாச்சியாரின் மூன்று பெண்களிடமும் விசாரணை மேற்கொள்கிறார். மாயன் முத்துராசை தான் கொன்றதாக மஹாவிடம் ஒத்துக்கொள்கிறார்.
“நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியல்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர், நமக்கு இருவர்” சீரியலில் இன்று டிஎஸ்பி கார்த்தி மீண்டும் வடிவின் வீட்டிற்கு வருகிறார். இதனால் பதட்டமடையும் குடும்பத்தினர் அனைவரும் அவரிடம் என்னவென்று விசாரிக்கின்றனர். அவர் தான் ஐஸ்வர்யா, சரண்யா மற்றும் காயத்திரி மூவரும் ஒன்று சேர்ந்து தங்களுக்கு துப்பாக்கி சுட தெரியும் என்பதனை மறைத்து விட்டனர் என்று கூறுகின்றனர். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர்.
ரோஜா சீரியலில் அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் – வெளியான ப்ரோமோ!
பின், கூடிய விரைவில் உண்மையான குற்றவாளியினை தான் கண்டுபிடிக்க இருப்பதாகவும் கூறி விட்டு சென்று விடுகிறார். பின், மஹா ஒரு பேப்பரில் கொலையில் தான் சந்தேகப்படும் நபர்களின் பெயர்களை எழுதுகிறார். அதனை பார்க்கும் மாயன் தான் முத்துராசை கொன்றதாக கூறுகிறார். இதனை கேட்டு விட்டு மஹாவிற்கு சிரிப்பு வந்து விடுகிறது.
TN Job “FB Group” Join Now
மாயன் செய்வதற்கான வாய்ப்புகளே கிடையாது என்று அடித்து கூறுகிறார். பின், இந்த கொலையினை சரண்யா, காயத்ரி அல்லது ஐஸ்வர்யா செய்திருக்கலாம் என்று கூறும் மஹா நாச்சியார் செய்திருக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார். இதனை கேட்டு ஆச்சரியம் அடையும் மாயன், அதற்கான காரணத்தினை கேட்கிறார். கொலை நடந்த அன்று அத்தை தன்னுடன் இருந்ததாகவும், தன்னிடம் வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்ததாகவும் கூறுகிறார். அதேபோல் அத்தை செய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.