ரோஜா சீரியலில் அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் – வெளியான ப்ரோமோ!
சன் டிவியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ரோஜா. இந்த சீரியல் பல திருப்பங்களை சந்தித்து உள்ளது. இந்நிலையில் இன்று புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி அதன் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரோஜா சீரியல்:
ரோஜா சீரியல், அர்ஜுன் மற்றும் ரோஜாவுக்கு இடையான காதல், அவர்களை பிரிக்க நினைக்கும் அனு, பாட்டி இவர்கள் ஒரு பக்கம். செண்பகத்தின் உண்மையான மகள் யார் என்பதை கண்டுபிடிக்க போராடும் அர்ஜுன் மற்றும் ரோஜா அவர்கள் மற்றொரு பக்கம் என கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது அனைவரும் எதிர்பார்க்காத வகையில் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
‘தென்றல் வந்து என்னை தொடும்’ – விஜய் டிவியில் புதிய சீரியல் ப்ரோமோ!
அதில் ரோஜாவின் பாதுகாப்பிற்காக அர்ஜுன், அனுவை கடத்துகிறார். அவர் சுயநினைவின்றி ஒரு அறையில் அடைத்து வைக்கப்படுகிறார். அப்போது அவருக்கு சுயநினைவு வருகிறது. அப்போது அங்கிருந்த ஆட்களை ஏமாற்றிவிட்டு அவர் தப்பி செல்கிறார். அவ்வாறு தப்பித்து அவர் நடுரோட்டில் நிற்கும்போது ஒரு விபத்து ஏற்படுகிறது. அந்த விபத்தில் இருந்து செண்பகம் அவரை காப்பாற்றுகிறார். ஆனால் அவரை பார்த்ததும் அனு மீண்டும் ஓட்டம் பிடிக்கிறார்.
TN Job “FB Group” Join Now
அதன் பின்னர் ரோஜாவிற்கு அடிபட்டு ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்வது போலவும் அவரை அர்ஜுன் கவனித்து கொள்வது போலவும் காட்டப்படுகிறது. மேலும் செண்பகம் சாக்ஷியை பிடித்து தான் யார் என்கிற உண்மையை தெரிந்து கொள்ள முயற்சிப்பது போலவும் ப்ரோமோவில் காட்டப்படுகிறது. இந்த ப்ரோமோ பார்த்த பின்னர் அடுத்து என்ன நடைபெறும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகி உள்ளது.
Pl remove useless chracter of anu’s father and paatti both irritating then the serial will go in right direction.