TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – தேர்வர்கள் கவனத்திற்கு!
தமிழக அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இனி அரசுத் தேர்வுகளில் தமிழ் மொழிக்கு முக்கியதத்துவம் அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.
TNPSC அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பல்வேறு அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. சமீபத்தில் ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகளில் ஒன்றிய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை மாவட்ட ஆட்சியர்களின் அனுமதியுடன் நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்வாணையங்கள் பணிகளை துவக்கி உள்ளன. தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் காலிப்பணியிடங்கள் குறித்த விபரங்களை சேகரித்து வருகிறது. விரைவில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
2023ம் ஆண்டுக்குள் 2500 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு – பிரபல நிறுவனம் அறிவிப்பு!
மேலும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கிடப்பில் போடப்பட்டு உள்ள தேர்வுகளை விரைவில் நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் போது, தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும், அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கும் அரசுப்பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் உள்ள மத்திய அரசுத்துறை பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
கடந்த ஜூலை 16ம் தேதி TNPSCக்கு புதிதாக 4 உறுப்பினர்களை அரசு நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டது. இனி டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் இனி தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. விடைத்தாள், வினாத்தாள் அறிவிக்கைகளில் தமிழ் மொழி பதிப்பு இன்றி முதலாவதாகவும், ஆங்கில பாதிப்பு இரண்டாவது ஆகவும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.