தமிழகத்தில் சட்ட கல்லூரி மாணவர்களுக்கு நேரடி தேர்வுகள் – பல்கலை திட்டம்!
தமிழகத்தில் சட்ட கல்லூரி மாணவர்கள் இணைய வழியில் தேர்வு எழுத முடியவில்லை எனில் மாணவர்கள் நேரடியாக தேர்வெழுத வாய்ப்பு அளிக்கப்படும் என டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சட்ட கல்லூரியில் நேரடி தேர்வு:
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த வருடம் முதல் தீவிரமாக பரவி வருகிறது. அதனால் அரசு தடுப்பு நடவடிக்கையின் முதல் பணியாக மாணர்வர்களின் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளையும் நிர்வாகங்கள் ஆன்லைன் மூலம் நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு கற்றலை தொடர்கின்றனர். மேலும் தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடைபெற்றது.
ஜூலை 26 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
சட்ட கல்லூரி மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு தற்போதைய கொரோனா சூழலை கருத்தில் கொண்டு சட்ட பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வுகள் இணையவழி வாயிலாக ஜூலை 19 முதல் நடத்தப்பட உள்ளன. இந்த நிலையில் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெற்றது. இந்த நிலையில் பலர் ஸ்மார்ட்போன் இல்லை என்றும் இணையதள வசதிகளை பெற முடியவில்லை என்றும் கூறுகின்றனர். அதனால் இணைய வழியில் தேர்வு எழுத முடியவில்லை எனில் மாணவர்கள் நேரடியாக தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும் என டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இணையவழியில் தேர்வு எழுத இயலாத மாணவர்கள் கொரோனா பரவல் குறைந்து மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பியதும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கல்லூரியில் நேரடியாக தேர்வெழுதும் வாய்ப்பை சட்ட பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு வழங்கும் எனவும், ஏற்கனவே இணையவழி தேர்வுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் நேரடி தேர்வெழுத எவ்விதமான கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை எனவும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக பதிவாளர் வி.பாலாஜி தெரிவித்துள்ளார்.