ஜூலை 26 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கோவாவில் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு ஜூலை 26 காலை வரை அமலில் இருக்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் வழங்கப்பட்ட தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையை தடுக்க கடந்த மே மாதம் முதல் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதும் கொரோனா பரவல் குறைவதற்கு காரணமாக உள்ளது. இந்நிலையில் பல மாநிலங்களில் கொரோனா வழக்குகள் குறைந்தாலும் ஊரடங்கை இந்த மாத இறுதி வரை நீட்டித்துள்ளனர்.
Jio, BSNL, Airtel & VIன் ரூ.447 ப்ரீபெய்ட் திட்டம் – அதிக பலன்கள் யாருக்கு?
அந்த வரிசையில் கோவாவில் கொரோனா பரவல் காரணமாக தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஜூலை 26 காலை 7 மணி வரை நீட்டிக்கப்படும் என மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இருந்த போதிலும் சில கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களும், பார்களும் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு நேரத்தில் 15 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
TN Job “FB Group” Join Now
மேலும் புதிய தளர்வுகளின் படி ஜிம்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்கவும், கடைகள் மற்றும் மால்கள் காலை 7 மணி முதல் மாலை 6 வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட வில்லை. மேலும் திரையரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி கோவாவின் கொரோனா வைரஸ் தாக்கம் 120 அதிகரித்து 1,69,740 ஆக உள்ளது.