இந்தியாவில் ஒரே நாளில் 38,792 பேருக்கு தொற்று உறுதி – மத்திய சுகாதாரத்துறை தகவல்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38,792 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 38,76,97,935 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டின் கொரோனா நிலவரம் :
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் நோய் பரவல் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் இந்தியாவில் தான் அதிகம் உள்ளது என உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் சில மாநிலங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தலைநகர் டெல்லி கொரோனா பரவல் மையமாகவே மாறியது. நோயாளிகள் அதிகரித்த காரணத்தால் மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் இல்லாமல் நோயாளிகள் சிரமப்பட்டனர்.
காய்ச்சலிலும் கண்ணம்மாவை பார்க்க அடம்பிடிக்கும் ஹேமா – பாரதியின் முடிவு என்ன ?
உயிர் காக்கும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமான நோயாளிகள் மூச்சு திணறி உயிரிழந்தனர். தொற்று பாதிப்பு அதிகரித்த காரணத்தால் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால் மருத்துவர்கள் உரிய நேரத்தில் சிகிக்சை அளிக்க முடிய அவல நிலை இந்தியாவில் உருவானது. முதல் அலையை விட இரண்டாம் அலை இந்தியாவின் அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்தியாவில் 3.09 கோடி பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் மத்திய சுகாதாரத்துறை கொரோனா பாதிப்பு நிலவரத்தை காலை 9 மணிக்கு வெளியிட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 38,792 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 38,792 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் புதிதாக 624 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டின் மொத்த உயிரிழப்பு 4,11,408 ஆக உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 41,000 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,01,04,720ஆக உள்ளது. மேலும் 4,29,946 பேர் கொரோனா தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவு படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இதுவரை 38,76,97,935 கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது.