காய்ச்சலிலும் கண்ணம்மாவை பார்க்க அடம்பிடிக்கும் ஹேமா – பாரதியின் முடிவு என்ன ?
இன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி ,ஹேமாவின் உடல்நல குறைவிற்கு காரணம் கண்ணம்மா சமைத்து கொடுத்து உணவு தான் என்று கூறுகிறார். அதே போல் ஹேமாவை அமெரிக்கா அழைத்து செல்வதில் உறுதியாக இருக்கிறார்.
“பாரதி கண்ணம்மா” சீரியல்
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் ஹேமாவிற்கு காய்ச்சல் அதிகமாக இருக்கிறது. இதனால் வீட்டினர் அனைவரும் பயந்து விடுகின்றனர். அப்போது பாரதி ஹேமாவிற்கு இப்படி ஆனதற்கு காரணம் சௌந்தர்யா தான் காரணம் என்று குற்றம் சுமத்துகிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர். கண்ணம்மா சமைத்து கொடுத்த உணவினை கொடுத்ததால் தான் இவ்வாறாக ஹேமாவிற்கு காய்ச்சல் வந்து விட்டது என்று கூறுகிறார்.
தமிழக அரசிடம் ரூ.5 லட்சம் கொரோனா நிதி – நடிகர் வடிவேலு வழங்கல்!!
பின், மருத்துவரை வரவழைத்து ஹேமாவின் உடல் நிலையினை பரிசோதிக்கின்றனர். ஹேமா மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஹேமா காய்ச்சல் வந்த போதிலும் சமையல் அம்மாவை பார்க்க வேண்டும் என்று கூறி கொண்டே இருக்கிறார். இதனால் பாரதிக்கு கோபம் அதிகமாகிறது. இதனால் வீட்டினர் மிகவும் கவலையில் இருக்கின்றனர். இப்படியான சூழலிலும் பாரதி ஹேமாவை அமெரிக்கா அழைத்து செல்வதில் உறுதியாக இருக்கிறார். இதனை கேட்டு விட்டு சௌந்தர்யா மற்றும் வேணு இருவரும் கோபம் அடைகின்றனர். ஆனால், யாரது பேச்சையும் கேட்பதாக இல்லை. இருவரையும் அஞ்சலிடம் கூறி வருந்துகின்றனர்.
TN Job “FB Group” Join Now
கண்ணம்மா தனது வீட்டில் பாரதி மற்றும் ஹேமாவை நினைத்து வருந்துகிறார். ஹேமா, வெண்பா மற்றும் பாரதி மூவரும் அமெரிக்கா செல்ல இருக்கின்றனர் என்று தவறாக புரிந்து கொள்ளகிறார். அதே போல் ஹேமாவை நினைத்து கண்ணம்மாவிற்கு கவலையாக இருக்கின்றது. பின், அடுத்த நாள் சௌந்தர்யா பாரதியை அமெரிக்கா போக விடாமல் தடுப்பதற்கு தன்னிடம் ஒரு யோசனை இருப்பதாக கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.