தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாதவர்கள் கவனத்திற்கு – இணைப்பு துண்டிப்பு?
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளாக கடந்த 2 மாதங்களாக முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் மின் நுகர்வோருக்கான கட்டணங்களை செலுத்தாதவர்களது இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது.
மின் இணைப்பு
கொரோனா 2 ஆம் அலை தடுப்பு கட்டுப்பாடுகளாக கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் ஜூலை 12 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் பலரது வருமானம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின் கட்டணம் செலுத்துபவர்களுக்கும் நெருக்கடிகள் உருவானது. இதனால் மின் கட்டணம் செலுத்துபவர்களுக்கான கட்டணம் மற்றும் இதர நிலுவை தொகையை செலுத்துவதற்கு ஜூன் 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 2 நிமிடங்களில் கடன் வழங்கும் புதிய திட்டம்!
அதாவது மின் கட்டணத்தை செலுத்த மே 10 முதல் 24 வரை கடைசி நாளாக கொடுக்கப்பட்டவர்களுக்கு கால அவகாசம் நீட்டித்து வழங்கப்பட்டது. இது தவிர சிறு மற்றும் குறு தொழில் செய்பவர்கள், தொற்சாலைகள் உள்ளிட்டவைகளுக்கு கூடுதல் வைப்புத்தொகை செலுத்துவதிலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதனிடையே கொரோனா 2 ஆம் அலை காரணமாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கால், மின் நுகர்வோரின் வீடுகளுக்கு சென்று மின் கணக்கீடுகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவானது.
அதனால் கடந்த மே மாதத்துக்கான மின் கட்டணத்தை மார்ச் மாத அளவீடுகள் படி செலுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டது. எனினும் இந்த மின் கட்டணம் அடுத்து வரும் ஜூன் மாத கணக்கீட்டில் கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசு அறிவித்த அளவீடுகளை விட அதிகளவு மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் தற்போது எழுந்துள்ளது. ஆனால் முழு முடக்கம் காரணமாக பலரால் குறிப்பிடப்பட்ட தேதிக்குள் மின் கட்டணத்தை செலுத்த முடியவில்லை.
TN Job “FB Group” Join Now
இதனால் கால தாமதமாகி மின் கட்டணம் செலுத்துபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆனால் அவர்களது மின் இணைப்புகள் துண்டிக்கப்படவில்லை. தற்போது நீட்டித்து கொடுக்கப்பட்ட கால அவகாசத்தை தாண்டியும் சிலர் மின் கட்டணத்தை செலுத்தாததால், அவர்களது இணைப்புகளை துண்டிக்கும் பணிகளை மின்சார வாரியம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் பொதுமக்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.