ஆந்திராவில் 11 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் – முதல்வர் அறிவிப்பு!
ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் பின்பற்றப்பட்டு வந்த ஊரடங்கில் புதிய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மால்கள் மற்றும் உணவகங்களில் கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு:
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இந்தியாவினை கொரோனா என்ற நோய் தொற்று ஆட்டிப்படைத்து வருகின்றது. இந்த நோய் தொற்றால் தற்போது வரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக அனைத்து மாநில அரசுகளும் கடுமையான ஊரடங்கினை அமல்படுத்தியது. நமது அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்தாதவர்கள் கவனத்திற்கு – இணைப்பு துண்டிப்பு?
நேற்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி செய்தியாளர்களிடம் இது குறித்து பேசினார். ஆசிரியர்கள் மற்றும் அரசு துறை ஊழியர்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்த முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகளை மால்கள், சினிமா தியேட்டர்கள் மற்றும் ஜிம்களுக்கு செல்லும் மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
கோதாவரி மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 5 சதவீதத்திற்கு குறையும் வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அங்கு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஊரடங்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அமலில் இருக்கும். இருந்தாலும், உணவகங்கள் இரவு 9 மணி அளவில் மூடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் தற்போது வரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 லட்சத்தினை கடந்துள்ளது. அதே போல் ஒரு நாளைக்கு 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் புதிதாக நோய் தாக்கத்தினால் பாதிப்படைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.