தமிழகத்தில் ஜூலை 12 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில் ஜூலை 5ம் தேதிக்கு பின்னர் கூடுதல் தளர்வுகளுடன் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இதனால் தினசரி 35 ஆயிரம் வரை பதிவு செய்யப்பட்டு வந்த புதிய தொற்று எண்ணிக்கை தற்போது 5 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து வருகிறது. எனவே முழு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு தமிழகம் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. கடந்த ஜூன் 28 முதல் ஜூலை 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு – அமைச்சர் அறிவிப்பு!!
அதன்படி வகை 2 இல் உள்ள 23 மாவட்டங்கள் உட்பட 27 மாவட்டங்களில் தற்போது பேருந்து பொது போக்குவரத்து தொடங்கி உள்ளது. வகை 3 இல் உள்ள சென்னை, காஞ்சிபுரம் உட்பட 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டு உள்ளன. மேலும் வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் (100% பணியாளர்களுடன்) செயல்பட தொடங்கி உள்ளது. இருப்பினும் வகை 1 இல் உள்ள 11 மாவட்டங்களில் குறைந்த அளவிலான தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டது.
தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – வாழ்நாள் சான்றிதழ்!
அங்கு கடைகள் திறப்பு நேரம் நீட்டிப்பு, தேநீர் கடைகள் (பார்சல் மட்டும்), சலூன் கடைகள் குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த 11 மாவட்டங்களில் மட்டும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது மாநில அளவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கீழ் சென்று உள்ளது. இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஜூலை 5ம் தேதிக்கு முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், புதிய தளர்வுகள் அளிப்பது தொடர்பாக இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!
இன்று காலை 11.30 மணி அளவில் தலைமை செயலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள், மருத்துவ நிபுணர் குழுவினர் பங்கேற்க உள்ளனர். இதில் 11 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு அனுமதி, இ-பதிவில் தளர்வுகள், தியேட்டர்கள் குறிப்பிட்ட அளவு பார்வையாளர்களுடன் திறப்பு, ஹோட்டல்களில் அமர்ந்து உண்ண அனுமதி, பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் கூடுதல் தளர்வுகள் வழங்கி முழு ஊரடங்கு ஒரு வார காலம் (ஜூலை 12 வரை) நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.