தமிழக தனியார் நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – தடுப்பூசி கட்டாயம்!
தமிழகத்தில் தனியார் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் நிறுவன பணியாளர்கள்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அச்சம் காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.. ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் தயாரிப்பு தொழில் நிறுவனங்கள் செயல்பட மாநில அரசு அனுமதி வழங்கியது. இதன் காரணமாக தொழில் நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் அனைவரும் தொழிற்சாலைகளில் வெவ்வேறு துறைகளில் பணிபுரிகின்றனர்.
Airtel வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – புதிய ரீசார்ஜ் திட்டங்கள் அறிமுகம்!
ஆனால் இடைவேளையின் போது உணவகங்களில் அனைவரும் ஒன்று கூடும் போது கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக தொழிற்சாலைகள் இயங்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் இதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!
தற்போது இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர்கள், சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி ஆகியோருக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெரிவித்ததாவது, தொழில் நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களின் செயல்பாடுகளை முறையாக கண்காணிக்க வேண்டும். மேலும் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனைத்து நிறுவனங்களும் முறையாக பின்பற்றுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் வாரம் ஒரு முறை நேரடியாக சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்றும் பணியாளர்கள் உடல் வெப்பம் பரிசோதனை செய்த பிறகே அவர்கள் தொழிற்சாலைக்குள் அனுமதிக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதையும், மருத்துவக் காப்பீடு கட்டாயமாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.