சமையல் எரிவாயு LPG சிலிண்டர் பயனர்கள் கவனத்திற்கு – ஒரே நாளில் டெலிவரி!
இந்தியாவில் புக் செய்தவுடன் அந்த நாளன்றே சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் என பொதுத்துறை நிறுவனமான இந்தியன் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உடனடி சிலிண்டர் டெலிவரி :
இந்தியாவில் அதிகப்படியான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துகின்றனர். இதன் பயன்பாடு மிகவும் எளிதாக உள்ளதால் அனைத்து வீடுகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் இன்றியமையாததாக உள்ளது. இது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகவும் உள்ளது. ஒரு சமையல் சிலிண்டர் விலை தற்போது 900 ரூபாய் வரை விற்கப்படுகிறது. சமீப காலமாக சமையல் எரிவாயுவின் விலை மிகவும் அதிகரித்து வருகிறது. இதனை கண்டித்து மக்கள் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். சிலிண்டர் வாங்கியவுடன் அதன் மானியத்தொகை நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் ஜூன் 27 முதல் ரயில் சேவைகளில் மாற்றம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
கடந்த மாதங்களில் இந்த சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அமேசான் போன்ற நிறுவனங்கள் சில சலுகைகளை வழங்கினார். ஒரு சமையல் சிலிண்டர் சுமார் 1 மாத காலம் வரை வரும். பெரும்பாலும் நாம் உபயோகிப்பதை பொறுத்தது. ஒரு இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், திடீரென சிலிண்டர் தீர்ந்து விட்டால், அவர்கள் பதிவு செய்தாலும், மறுநாள் தான் சிலிண்டர் கிடைக்கும். இது கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
TN Job “FB Group” Join Now
அதனால் இந்தியன் ஆயில் நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு, 1.36 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தினமும் சராசரியாக இந்தியன் நிறுவனம் 2.5 லட்சம் எரிவாயு சிலிண்டர்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்கிறது. . இதற்கு தக்கல் திட்டம் என்று பெயர். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் அறிவித்து மக்கள் அதிகத்தொகை கொடுத்து நஷ்டமடைவதை தவிற்க உதவலாம்.எல்லோரிடமும் கம்பெனி ரசீதுக்கு மேல் பணம் ஏமாற்றி ரூ.50,60/-என கரந்து விடுகிறார்கள்.இதற்கு உதவுங்களேன்.புண்ணியம் உங்களுக்கு.
நாம் அனைத்துக்கும் தான் பணம் செலுத்துகிறோம் இருந்தும் அவர்கள் பணம் கேட்பது சட்ட படி குற்றமாகும். முடிந்தவரை புகார் செய்யுங்கள், நானும் அப்படிதான் செய்தேன். இப்படி ஒவ்வொருவரும் புகார் செய்தால் தான் அரசுக்கும் தெரிந்து நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்.
புகார் எண்: 1906 or 18002333555.