இன்று முதல் மதுபான பார்கள் திறக்க அனுமதி – ஊரடங்கு தளர்வுகள் அமல்!
டெல்லி நகரில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அவை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
டெல்லியில் நேற்றைய நிலவரப்படி, 124 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்லியின் நேர்மறை விகிதம் 0.17% ஆக உள்ளது. மேலும், நேற்று ஒரு நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் 23,000க்கும் மேற்பட்டவர்களில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது 1,281 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக ஏப்ரல் 19ம் தேதி முதல் டெல்லியில் முதலில் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
மத்திய அரசின் மாதம் ரூ.3000 பெறும் பென்சன் திட்டம் – முழு விவரங்கள்!!
பின்னர் 6 கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தற்போது வரை கட்டுப்பாடுகள் நீடிக்கின்றது. தற்போது கொரோனா பரவல் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், படிப்படியாக தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. கட்டுமான நடவடிக்கைகள் மற்றும் தொழிற்சாலைகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. பூங்காக்கள், தோட்டங்கள், கோல்ஃப் மைதானங்கள் மற்றும் வெளிப்புற யோகா ஆகியவை அனுமதிக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
இருப்பினும், கல்வி நிறுவனங்கள், ஜிம்கள், ஸ்பாக்கள் மற்றும் யோகா நிறுவனங்கள் மற்றும் திரைப்பட அரங்குகள் திறக்க அனுமதி அளிக்கவில்லை. அனைத்து சமூக, அரசியல் மற்றும் விளையாட்டு கூட்டங்கள் மற்றும் சபைகள் தடைசெய்யப்பட்டுள்ளது. மதியம் முதல் இரவு 10 மணி வரை 50% இருக்கை திறன் வரை பார்கள் அனுமதிக்கப்படும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் அனைத்தும் ஜூன் 27ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு பொருந்தும். அதன்பிறகு உள்ள பரவல் நிலைமையைப் பொறுத்து டெல்லி அரசு முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.