மத்திய அரசின் மாதம் ரூ.3000 பெறும் பென்சன் திட்டம் – முழு விவரங்கள்!!
மத்திய அரசின் பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா திட்டம் மூலமாக உங்களது ஓய்வூதிய காலத்திற்கு பின்னர் மாதம் பென்சன் தொகை ரூ.3000 கிடைக்கும். இது குறித்த விவரங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பென்சன் திட்டம்:
மக்கள் பலர் அரசு வேலை கிடைக்க பெரும் பாடுபடுகின்றனர். காரணம் மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஓய்வு காலத்திற்கு பின்னர் பென்சன் வழங்கப்படும். ஆனால் பலருக்கும் அரசு வேலை என்பது கனவாக மட்டுமே உள்ளது. இந்நிலையில் நீங்களும் மாதம் ரூ.3000 பென்சன் பெற மத்திய அரசு, பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் யோஜனா என்ற அருமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜூன் 28 வரை பல்கலைக்கழக வளாக ஊரடங்கு நீட்டிப்பு – JNU அறிவிப்பு!
இந்த திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் சேமித்தாலே கடைசி காலத்தில் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 3,000 ரூபாய் பென்சன் வந்து கொண்டே இருக்கும். குறிப்பாக இந்த திட்டம் அமைப்பு சாரா துறையைச் சேர்ந்த ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 18 முதல் 40 வயது வரை உள்ள இந்தியர்கள் இணைந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் அரசு பொதுச் சேவை மையங்கள் மூலமாக கணக்கு தொடர முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்குவதற்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் தேவைப்படும். கணக்கு தொடங்கிய பின்னர் கார்டு ஒன்றும் வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் நீங்கள் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையில் சேமிக்கலாம். உங்களுக்கு 60 வயது ஆன உடன் பென்சன் வழங்கப்படும்.
TN Job “FB Group” Join Now
ஒரு மாதத்துக்கு 55 ரூபாய் சேமிப்பதாக இருந்தால் 42 வருடங்களுக்கு இத்திட்டத்தில் சேமிக்க வேண்டும். இதன்படி உங்களது முதலீட்டுப் பணம் ரூ.27,720 ஆக இருக்கும். நீங்கள் விரும்பினால் மாதாந்திர பென்சனுக்குப் பதிலாக, வருடாந்திர பென்சனாக ரூ.36,000 பெறலாம்.
அய்யா, 16 11.1995 இல் அறிமுகம் செய்யப்பட்ட தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் 1995 (Employees Pension Scheme 1995 in EPFO) தொழிலாளர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் சமூக பாதுகாப்பு திட்டம் என்று வர்ணிக்க ப்பட்டது. அதன்படி அரசு அலுவலர்கள் தவிர ஏனைய கூட்டுறவு பொதுத்துறை தனியார் துறை, தனியார் கல்லூரிகள், பள்ளிகள் தொழிற்சாலைகளில் 20 நபருக்கு மேல் பணிபுரியும் நிறுவனங்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் தானாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும்…அதில் உறுப்பினர்களாக அதன் ஊழியர்கள் சேர்ந்து பங்களிப்பு செய்வதன் மூலம்..அவர்களின் பணிக்காலத்தில் அவர்கள் பெறும் சம்பளத்தில் 12 சதம் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது.அது போல அந்த நிறுவனம் சார்பில் 12 சதம் செலுத்தி வருகிறது..அதில் 8.33 சதம் ஓய்வூதிய நிதி யில் சேர்த்துக்கொள்ள பட்டது.எஞ்சிய 3.67 சதம் ஊழியரின் கணக்கில் சேர்க்கப்பட்டு வருகின்றன….ஓய்வூதிய நிதி யில் நடுவண் அரசின் பங்காக 1.67 சதம் அளிக்கிறது.. இந்த ஓய்வூதிய மூலதன நிதியில் இருந்து 10 ஆண்டுகள் சந்தா செலுத்தி 58 வயது நிரம்பிய தொழிலாளர் ஓய்வூதிய திட்டம் மூலம் ஓய்வூதியம் பெற தகுதி பெறுகிறார் ..அதற்கான சம்பள உச்சவரம்பு 3000 ரூபாயில் இருந்து 5000, 6500 என்ற நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக சம்பள உச்சவரம்பு உயர்த்தப்பட வில்லை.. 01.09.2014 இல் 15000 ரூபாயாக உயர்த்தி அதேகேற்ப ஓய்வூதியம் பெறும் நிலை உள்ளது . ஆனால் 01.09.2014 க்கு முன்னர் 1995 இல் இருந்து உறுப்பினராகி சந்தா செலுத்தி வந்தும் அவர்களது கடைசியாக பெற்ற சம்பளத்தை ஓய்வூதியம் கணக்கிடும் முறை தவிர்க்கப்பட்டு 6500 என்று கணக்கில் கொள்ளப்பட்டு 26.11.2005 இல் 58 வயது நிரம்பிய தொழிலாளர் 1220 ரூபாய் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்..அதன் பிறகு 2010 இல் 1800 ரூபாய் , 2015 இல் 2200 ரூபாயும் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்….அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தியும் அதனை நடுவண் அரசு நிராகரித்து வருகிறது ..
இந்த அவல நிலையை தவிர்க்க அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை 8000 ரூபாயாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் சொன்னபடி நடுவண் அரசை வலியுறுத்தி வருகின்றனர்..தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்..தமிழ் நாட்டில் 2 லட்சம் மூத்த குடிமக்கள் வருங்கால வைப்பு நிதியில் சொற்ப தொகையை ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்….இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் உள்ள ( superannuation member pensioners of the EPFO) வேண்டுகின்றனர்…
அன்புடன், வை இராசேந்திரன் உடையார், சென்னை..9865775989