தமிழகத்தில் கறிக்கடைகளை திறக்க அரசு அனுமதி – ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு!
ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு நாட்களில் கறிக்கடைகளை திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
கறிக்கடைகள் திறக்க அனுமதி
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு உத்தரவானது ஜுன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் மக்களின் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காய்கறி, மளிகை கடைகள் அனைத்தும் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் படி உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மளிகை, காய்கறி கடைகள் திறக்க அனுமதி – நேர கட்டுப்பாடுகள் விபரம்!
இது தவிர கறிக்கடைகள், மீன் சந்தைகள் உள்ளிட்டவை செயல்படுவதற்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூன் 7 ஆம் தேதி முதல் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி, காலை 6 முதல் மாலை 5 மணி வரை இறைச்சி கடைகள், மீன் கடைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேர அளவுகளுடன் மட்டும் செயல்படும் இந்த கடைகளில் பொது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் முகக்கவசங்களை அணிவது கட்டாயம் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
அதன் படி மீன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், திறந்த வெளியில் சந்தைகளை அமைக்கும் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர இறைச்சி கடைகளில் மொத்த வியாபாரத்திற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களிலும் இத்தகைய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்த எந்த கடைகள் திறக்கப்பட வேண்டும் என்ற முழுமையான அறிவிப்புகள் E பாஸ் வேண்டுமென்றால் அவன் அவன் பி கம்பி படுத்துவிட்டால் பிளம்பர் வேலையும் செய்கிறார்கள் முழுமையான அறிவிப்பை வெளியிடும்