தமிழக அரசு சுகாதார நிலைய வேலைவாய்ப்பு தேர்வு தள்ளிவைப்பு – அரசு அறிவிப்பு!!
தமிழ்நாடு அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நிர்வாக காரணங்களுக்காக தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவிப்பு:
தேசிய ஊரக நலத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் மே 28ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. மருந்து வழங்குபவர், சிகிச்சை உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கு 555 காலியிடங்கள் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
ஆர்வமுள்ளவர்கள் http://www.tnhealth.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, சென்னை – 600106 அரும்பாக்கம், அறிஞர் அண்ணா அரசியர் இந்திய மருத்துவமனை வளாகத்திலுள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை இயக்குனர் என்ற முகவரியில் ஜூன் 15ம் தேதி மாலை 5 மணிக்கு முன்னதாக விண்ணப்பம் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி? தளர்வுகள் அளிக்க வாய்ப்பு!!
தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும், நிராகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலுமிருந்து பலர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், நிர்வாக காரணங்களுக்காக வேலைவாய்ப்புத் தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.