தமிழகத்தில் கீழமை நீதிமன்ற பணிகள் நிறுத்தி வைப்பு – உயர்நீதிமன்றம் உத்தரவு!!
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் தாக்கத்தின் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை கீழமை நீதிமன்ற பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுவதாக உயர் நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்.
நீதிமன்ற பணிகள்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவலினால் ஏற்படும் தாக்கம் அதிக பாதிப்புகளை உண்டாக்கி வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் 33,181 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 2,19,342 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 311 பேர் தொற்று பாதிப்பினால் நேற்று உயிரிழந்துள்ளனர்.
தமிழக முதல்வரின் பொது நிவாரணம் – நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி!!
இதனால் தமிழகம் முழுவதும் தீவிரமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் இருந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான தேவைகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து சேவைகள் மற்றும் நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழகத்தில் கீழமை நீதிமன்ற பணிகள் அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் திருநெல்வேலி தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதி நீஷ் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், வக்கீல்கள், வழக்காடிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்ற வளாகங்களுக்கு வர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.