தமிழக முதல்வரின் பொது நிவாரணம் – நடிகர் விக்ரம் ரூ.30 லட்சம் நிதியுதவி!!
கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் தமிழக மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் விக்ரம் 30 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
நிவாரண நிதி
கொரோனா 2 ஆம் அலையின் காரணமாக தமிழகத்தில் ஒரு நாளில் 35 ஆயிரம் வரை தொற்று உறுதி செய்யப்படுகிறது. மேலும் தினசரி 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 2 வாரங்களுக்கு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகள், மருத்துவ சிகிச்சை, நிவாரண நிதி என பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழக அரசு ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் – இயக்குனர் வெளியீடு!!
முன்னதாக தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு அதிகமான பணத்தேவை இருப்பதாக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் பொது மக்கள் இந்த இக்கட்டான சூழலை கடந்து வர, அரசுக்கு உதவிக்கரம் நீட்ட விரும்புபவர்கள் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கலாம் என அறிவித்திருந்தார். தொடர்ந்து முதல்வரின் நிவாரண நிதிக்கு, திமுக எம்எல்ஏ.,க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார்.
TN Job “FB Group” Join Now
அதன் படி தமிழக பிரபலங்கள், தொழிலதிபர்கள் உட்பட பலர், முதல்வரின் நிவாரண நிதிக்கு பல லட்சங்களை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது, நடிகர் விக்ரம் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, 30 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி உள்ளார். இந்த நிதி உதவியை அவர் முதல்வரிடம் நேரடியாக வழங்காமல், வங்கி பணபரிவர்த்தனை மூலமாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thankyou sir 🙏🙏🙏