அரசு, தனியார் வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – NEFT சேவை நிறுத்தம்!!
நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளிலும் வரும் மே 23ம் தேதி அன்று NEFT சேவை இருக்காது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனை பின்பற்றி வாடிக்கையாளர்கள் பணிகளை திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
NEFT சேவை நிறுத்தம்:
தொழில்நுட்ப வளர்ச்சிகள் பல மடங்கு அதிகரித்து விட்ட தற்போதைய காலத்தில் பணபரிவர்த்தனைகள் செய்வது மிகவும் சுலபமாகி விட்டது. வங்கிகளில் உள்ள நெஃப்ட் (NEFT) அல்லது ஆர்டிஜிஎஸ் (RTGS) போன்ற சேவை முறைகள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆர்டிஜிஎஸ் சேவையில் நிகழ்நேரத்தில் பணபரிவர்தனைகள் செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
ஆனால் நெஃப்ட் சேவையில் நிகழ்நேரத்தில் பணப்பரிவர்த்தனை செய்யப்படுவதில்லை. வங்கி பயனர்கள் தங்கள் நிதியை எளிதாகவும், பாதுகாப்பாகவும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் வசதியை அளித்து வருவதால் இந்த சேவைகளை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஆர்டிஜிஎஸ் சேவை 24 மணி நேரமும் செயல்படும். ஆனால் நெஃப்ட் சேவை வங்கி பணி நேரங்களில் மட்டுமே செயல்படும்.
TN Job “FB Group” Join Now
வரும் மே 23ம் தேதி பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் மே 23ம் தேதி அதிகாலை 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நெஃப்ட் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு வழக்கம் போல் செயல்படும் என்றும் ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.