தமிழக பொதுப்பணித்துறை ஓட்டுனர்களின் ஒரு நாள் ஊதியம் – கொரோனா நிவாரணமாக வழங்க முடிவு!!
கொரோனா நிவாரண நிதிக்காக தங்களது ஒரு நாள் ஊதியத்தினை வழங்க முடிவு செய்திருப்பதாக தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம் அரசிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.
பொதுப்பணித்துறை ஓட்டுனர்கள் சங்கம்:
தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாவது அலை மிகவும் மோசமடைந்து வருகின்றது. மேலும் நாள் ஒன்றிற்கு 200க்கும் அதிகமானோர் மரணம் அடைந்தும், 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்தும் வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் கடந்த மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு பின்பற்றபட்டு வருகின்றது. கூடுதலாக, கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்குமாறு கோரப்பட்டு உள்ளது.
தமிழகத்தை தாக்கும் ‘டவ்தே’ புயல் – மே 18 வரை கனமழைக்கு வாய்ப்பு!!
இந்த நிவாரண நிதிக்காக பல தரப்பில் இருக்கும் அரசு ஊழியர்கள் தங்களது ஊதியத்தில் ஒரு பங்கினை தர முன் வந்துள்ளனர். தற்போது தமிழநாடு பொதுப்பணித்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் தங்களது ஒரு நாள் ஊதியத்தினை வழங்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இதற்காக சங்கத்தின் மாநில பொது செயலாளர் ராமமூர்த்தி அவர்கள் தமிழக முதல்வர் முக ஸ்டாலினிற்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதில் கொரோனா பாதிப்பிற்கு எதிராக தமிழக அரசு எடுத்து வரும் சீரிய முயற்சிக்கு தங்களது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர். பின், இந்த முயற்சியில் தங்களது பங்காக பொதுப்பணித்துறை ஊர்தி ஓட்டுனர்களின் ஒரு நாள் சம்பளத்தினை அரசு வழங்கும் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.