தமிழகத்தில் முழு ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் – இன்று முதல் அமல்!!

1
தமிழகத்தில் முழு ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் - இன்று முதல் அமல்!!
தமிழகத்தில் முழு ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் - இன்று முதல் அமல்!!
தமிழகத்தில் முழு ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் – இன்று முதல் அமல்!!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கில் மேலும் சில கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அவை இன்று (மே 15) முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக மே 10 முதல் 24 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள இந்த ஊரடங்கை பொது மக்கள் சரியாக பின்பற்றாத காரணத்தால், கொரோனா அதிகம் பரவக்கூடிய அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாட்டை மேலும் தீவிரப்படுத்த அரசு முடிவு செய்தது.

TN Job “FB  Group” Join Now

அதன் படி இந்த ஊரடங்கின் போது, அத்தியாவசிய காரணமின்றி வெளியே சுற்றி திரியும் நபர்களுக்கு கடும் தண்டனை விதிக்கவும், ஊரடங்கு கட்டுப்பாட்டை தீவிரப்படுத்துவது குறித்தும் நேற்று (மே 14) தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து, நேற்று (மே 14) அறிவிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் இன்று (மே 15) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன் படி,

  • மதியம் 12 மணி வரை மட்டுமே தனியாக செயல்பட்டு வந்த மளிகை, பலசரக்குகள், காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் இயங்க அனுமதி.
  • அந்த கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
  • இந்த கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
  • ஏ.டி.எம், பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் வழக்கம் போல செயல்படும்.
  • ஆங்கிலம் மற்றும் நாட்டு மருந்து கடைகள் வழக்கம் போல செயல்படும்.
  • காய்கறி, பூ மற்றும் பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் இயங்க தடை.
  • டீ கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்படும்.
  • வணிக நிறுவனங்கள் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்.
  • வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம்.
  • திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவைகளுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையேயான பயணம் அனுமதிக்கப்படும்.
  • இந்த இ-பாஸ் நடைமுறை மே 17 முதல் அமலுக்கு வரும்.
  • வெளி மாவட்டங்களுக்கு பயணம் செய்ய விரும்புபவர்கள் https://eregister.tnega.org என்ற இணையதளத்தை பயன்படுத்தி பதிவு செய்திருக்க வேண்டும்.
  • மேலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.
    வழக்கம் போல ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!