தமிழகத்தை தாக்கும் ‘டவ்தே’ புயல் – மே 18 வரை கனமழைக்கு வாய்ப்பு!!
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (மே15) காலை புயலாக மாறி உள்ளது. டவ்தே புயல் குஜராத்தில் மே 18 ஆம் தேதி அன்று கரையை கடக்கிறது
புயல் எச்சரிக்கை:
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தாழ்வு மண்டலமாக வலு பெற்றதை தொடர்ந்து தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர் உயர்வு – வாகன ஓட்டிகள் கவலை!!
இந்நிலையில் இன்று (மே 15) காலை இது புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு டவ்தே என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து மே 18 ஆம் தேதி அன்று குஜராத்தில் கரையை கடக்கிறது. அதனால் தமிழகத்தில் மே 18 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதே போல மே 16,17 ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாதங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 18 ஆம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கேரளா, கர்நாடகா, தமிழகம், மராட்டியம், கோவா, குஜராத் மாநிலங்களில் புயலின் தாக்கம் இருக்கும் எனவே கனமழை பெய்யும் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் முகாம் அமைத்துள்ளனர்.