தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13 வகை மளிகை பொருட்கள் வழங்கல் – அரசு திட்டம்!!
தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக ரேஷன் கடைகளில் 13 வகை மளிகை பொருட்கள் விரைவில் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா நிவாரணம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி மக்களை பாதிப்புக்கு ஆளாக்கி வருகிறது. மாநில அரசு தடுப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து செய்து வருகிறது. எனினும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து நிகழும் உயிரிழப்புகள் மக்களிடையே அச்சத்தை அதிகரிக்கிறது. ஊரடங்கு மட்டுமே தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் என சுகாதாரத்துறை கூறுகிறது.
TN Job “FB Group” Join Now
எனவே அவர்களின் அறிவுறுத்தலின் படி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தமிழகத்தில் தற்போது 14 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார். மேலும் மக்களுக்கு ஊரடங்கை சமாளிக்கும் பொருட்டு உதவித் தொகையாக ரேஷன் கடைகள் மூலம் ரூபாய் 4000 வழங்கப்படும் எனவும் அதன் முதல் தவணை ரூ.2000 இம்மாதமே வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். அதற்கான பணிகளும் தொடங்கி விட்டது.
ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களுக்கு மூலதன மானியம் – தமிழக அரசு அறிவிப்பு!!
மேலும் கொரோனா நிவாரணமாக ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சுமார் 2.11 கோடி ரேஷன் அட்டைகளுக்கு அரிசி, உப்பு, பருப்பு, கோதுமை, ரவை உள்ளிட்ட 13 வகையான பொருட்கள் ஜூன் 3 கலைஞர் பிறந்தநாள் அன்று மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Very useful