ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களுக்கு மூலதன மானியம் – தமிழக அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அரசு 30% மூலதன மானியம் வழங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆக்சிஜன் உற்பத்தி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காட்டுத்தீ போல பரவி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோய் பாதிப்பு அதிகரிப்பதால் நோயாளிகளின் எண்ணிக்கையும் எதிர்பாராத அளவு அதிகரித்து வருகிறது. அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் – மகாராஷ்டிரா முதலிடம்!!
தொற்று பரவலை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு பணிகளையும் தீவிரமாக செய்து வருகின்றது. தமிழகத்தில் தற்போது மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ரெம்டெசிவிர் மருந்து கொரோனா சிகிசையில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த மருந்து பற்றைக்குறையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் மருத்துவமனைகளில் உயிர் காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் போதிய அளவு கிடைக்காமல் நோயாளிகள் உயிரிழக்கும் அவலம் நிகழ்ந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
எனவே அரசு இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பை உறுதி செய்து வருகிறது. மேலும் கூடுதலாக ஆக்சிஜன் தமிழகத்திற்கு தேவைப்படுவதால் அரசு ஆக்சிஜன் உற்பத்தியை நிறுவனங்கள் அதிகப்படுத்த அறிவுறுத்தியுள்ளது. மேலும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு 30% மூலதன மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் அந்நிறுவனங்களுக்கு சிப்காட், சிட்கோ மூலம் முன்னுரிமை அடிப்படையில் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்