CBSE 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி வாரியம் வெளியீடு!!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பீடு முறையை பற்றி விரிவாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதிப்பீடு முறை:
சிபிஎஸ்இ கல்வி வாரியம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 10 ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ததோடு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளிவைத்து உத்தரவிட்டது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு உள்மதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவித்தது. தற்போது உள்மதிப்பீடு முறைக்கான விரிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – சம்பள கணக்கின் 5 நன்மைகள்!!
அதன்படி, மொத்தம் உள்ள 100 மதிப்பெண்களின் 20 மதிப்பெண்கள் அகமதிப்பீட்டின் அடிப்படையிலும், மீதம் உள்ள 80 மதிப்பெண்கள் கல்வி வாரியம் வடிவமைத்த புதிய கொள்கையின் படியும் வழங்கப்பட இருக்கிறது. இந்த 80 மதிப்பெண்களுக்கு பள்ளியில் நடத்தப்பட்ட தேர்வுகளின் மதிப்பெண்கள் பயன்படுத்தப்படும். அதில், 40 மதிப்பெண்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் இருந்து, 30 மதிப்பெண்கள் இடை பருவத்தேர்வுகளில் இருந்து, 10 மதிப்பெண்கள் பள்ளிகளில் அவ்வப்போது நடந்த தேர்வுகளில் இருந்து கணக்கிடப்பட இருக்கிறது.
TN Job “FB Group” Join Now
சிபிஎஸ்இ வாரியம் ஒவ்வொரு பள்ளியையும் ஒரு முடிவுக் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது, இதில் முடிவுகளை இறுதி செய்வதற்கு தலைவரும் ஏழு ஆசிரியர்களும் இருக்க வேண்டும். 80 மதிப்பெண்களுக்கான ஆவணத்தை பள்ளிகள் மே 15 க்குள் இறுதி செய்து மே 15 முதல் 28 க்குள் சிபிஎஸ்இ வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அகமதிப்பீட்டு 20 மதிப்பெண்களுக்கான ஆவணத்தை ஜூன் 11ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சிபிஎஸ்இ கல்வி வாரியம் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூன் 20ம் தேதி அன்று வெளியிட இருக்கிறது.