ஏப்ரல் 23 முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
சண்டிகர் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரு நாள் முழு ஊரடங்கும், வரும் வெள்ளி முதல் (ஏப்ரல் 23) வார இறுதி முழு ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று:
நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றின் அலை தீவிரமாக இருந்தது. இதனால் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கினால் பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் போன்ற அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டது. இதனால் நாட்டின் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்தது .
பழங்குடியின வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு – அலுவலர் அறிவிப்பு!!
இரண்டாம் அலை:
கொரோனா தொற்றின் முதல் அலை கடந்த 2020 இறுதி மாதங்களில் குறைந்து வந்த நிலையில், தற்போது 2021 மார்ச் முதல் இரண்டாம் அலை நாட்டில் வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் கடந்த 10 நாட்களாக தொற்றின் பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இன்று ஒரு நாளில் மட்டும் நாட்டில் தொற்றினால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 2.95 லட்சம் ஆகும். இதனால் தீவிர நோய் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுளள்து.
ஊரடங்கு:
சண்டிகர் மாநிலத்திலும் நோய் கட்டுப்பாட்டு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ராம நவமி நாளான இன்று முழு ஊரடங்கும், வரும் வெள்ளிக் கிழமை (ஏப்ரல் 23) முதல் வார இறுதி ஊரடங்கு அதாவது வெள்ளிக் கிழமை இரவு 8 மணி முதல் திங்கள் கிழமை காலை 5 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்