பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடக்கம் – மாநில அரசு அறிவிப்பு!!
கொரோனா தடுப்பு நடவடிக்கை:
ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள கோவிட்-19 நடவடிக்கைகளை கண்காணிக்க சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், துணை முதல்வர் அல்லா காளிகிருஷ்ணா சீனிவாஸ் (நானி) தலைமையில், உள்துறை அமைச்சர் மெகதோதி சுச்சரிதா, நகராட்சி நிர்வாக மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் போட்சா சத்யநாராயணா, நிதி அமைச்சர் புகனா ராஜேந்திரநாத் மற்றும் வேளாண் அமைச்சர் குராசல கண்ணா ஆகிய அமைச்சர்கள் அடங்கிய குழுவை நிர்ணயித்துள்ளது.
தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பாடங்கள் – கல்வித்துறை ஏற்பாடு!!
கல்வி நிறுவனங்கள்:
இக்குழுவினர் மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி குறித்து ஆலோசனைகளை அரசுக்கு வழங்கி வருகிறது. மேலும், மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவித்து வருகிறது. அந்த வகையில், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகள் அனைத்தும் நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை வரும் திங்கள் கிழமை (ஏப்ரல் 26) உடன் முடித்து கொள்ளுமாறும், அதன் பின்னர் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து உறைவிட, தனியார் பள்ளிகளும் தங்கள் வளாகங்களை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆந்திர மாநில 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் உணவு பொருட்கள் சமைக்காமல் வழங்கப்பட உள்ளது. பள்ளிகள் செயல்படும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய உணவு வழக்கம் போல் சமைத்து வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்