வேளாண் ஆராய்ச்சி சேவை நிறுவன வேலை – 222 பணிகளுக்கு ஆன்லைன் பதிவுகள் தொடங்கியது !
மத்திய அரசின் வேளாண் விஞ்ஞானிகள் ஆட்சேர்ப்பு வாரியத்தில் உருவாகியுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது கடந்த வாரத்தில் தான் வெளியாகியது. அந்நிறுவனத்தில் வேளாண் ஆராய்ச்சி சேவை (ARS) பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் 05.04.2021 முதல் 25.04.2021 அன்று வரை ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அதற்கான இணைய முகவரி செயல்பட துவங்கி விட்டது. விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை எங்கள் வலைப்பதிவில் அறிந்து கொண்டு அதன் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TN Job “FB Group” Join Now
ஆன்லைன் விண்ணப்ப வழிமுறைகள் :
- கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரியில் சென்று முதலில் ரெஜிஸ்டர் செய்து கொள்ள வேண்டும்.
- அதன் பின்னர் அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
- இந்த செயல்முறைக்கு பின்னர் விண்ணப்பதாரிகள் தங்களின் கையொப்பம் மற்றும் புகைப்படம் ஆகியவற்றினை ஸ்கேன் செய்ததன் பிறகு பதிவேற்றம் செய்திட வேண்டும்.
- அதற்கு அடுத்தபடியாக தேர்வர்கள் தங்களின் தேர்வு கட்டணத்தை முறையாக செலுத்திட வேண்டும்.
- இப்பணிகள் யாவற்றையும் சரியாக செய்து முடித்த பின்னர் இறுதியாக தங்களின் ஆன்லைன் விண்ணப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்
இப்பணிகளுக்கான தகுதிகள் மற்றும் இதர தகவல்களை கொண்ட அறிவிப்பினை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.