மார்ச் மாத ஜேஇஇ தேர்வுகள் நாடு முழுவதும் தொடங்கியது – என்டிஏ அறிவிப்பு!!!
2021ம் ஆண்டுக்கான மார்ச் மாத ஜேஇஇ தேர்வுகள் நேற்று முதல் தொடங்கியது. தேர்வில் ஆறு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேஇஇ தேர்வுகள்:
தேசிய தேர்வு முகமை 2021ம் ஆண்டுக்கான ஜேஇஇ நுழைவு தேர்வை நடப்பு ஆண்டு முதல் நான்கு கட்டங்களாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடத்த உள்ளது. நடப்பு ஆண்டுக்கான முதல் கட்ட பிப்ரவரி மாத தேர்வுகள் கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. முதல் ஷிப்ட் தேர்வு காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெறும். இரண்டாவது ஷிப்ட் மதியம் 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு?? – பிரதமர் மோடி இன்று ஆலோசனை!!
மார்ச் மாத தேர்வுகள்:
இரண்டாம் கட்ட மார்ச் மாத தேர்வுகள் நேற்று முதல் (16.3.2021) முதல் மார்ச் 18ம் தேதி வரை நடக்க இருக்கிறது. தேர்வுகள் எழுத்து முறையில் நடக்கிறது. நடப்பு ஆண்டு தேர்வுகளில் எதிர் மதிப்பெண்கள் முறை இல்லை. மாணவர்கள் தங்கள் விருப்பம் போல் தேர்வை ஒரு முறையில் இருந்து நான்கு முறை வரை எழுத அனுமதிக்கப்ட்டுள்ளனர். அதிமுக மதிப்பெண் எடுத்த தேர்வின் மதிப்பெண்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தேர்வுகள் மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் கருதினர். ஆனால் நேற்று நடந்த கணித வினாக்கள் மிகவும் கடினமானதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். ஜேஇஇ மெயின் தேர்வு இன்று மற்றும் நாளை நடக்க இருக்கிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்