தமிழக நுகர்வோர் நீதிமன்ற காலிப்பணி இடங்கள் – தேர்வுக்குழு அமைக்க உத்தரவு!!
தமிழகத்தில் நுகர்வோர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணிகளுக்கான பணியாளர்களை நிரப்புவதற்காக தேர்வுக்குழுவை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் நீதிமன்றம்:
இந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அளவிலும், மாவட்டங்களிலும் நுகர்வோர் நீதிமன்றங்கள் உள்ளது. பொதுமக்கள் வணிக ரீதியாக தங்களுக்கு நேர்ந்த பிரச்சனைகளை இங்கு முறையிடலாம்.
இக்னோ பல்கலை எம்பிஏ, பிஎட் நுழைவுத்தேர்வு – மார்ச் 20 கடைசி நாள்!!
தமிழகத்தில் மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் தலைவர் பதவி காலியாக உள்ளது. மேலும், மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களிலும் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான பதவிகள் காலியாக உள்ளது. தமிழக நுகர்வோர் நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப அரசுக்கு கோரிக்கை வைக்கும் வகையில் வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
தேர்வுக்குழு:
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதிகள் செந்தில் குமார், ராமமூர்த்தி அவர்களின் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்ததது. இதனை விசாரித்த நீதிபதிகள் நுகர்வோர் நீதிமன்றங்களில் உள்ள காலியிடங்களை நிரப்ப விரைவில் தேர்வுக்குழு அமைக்கப்படும் என்றும், தேர்வுக்குழுவின் தலைவராக நீதிபதி சுப்பையாவை நியமிப்பதாகவும் அறிவித்தது. மேலும், விசாரணை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைப்பதாகவும் அறிவித்தார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்