தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு தடை? அரசு பதிலளிக்க உத்தரவு!
தமிழகத்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு செல்வதை தடை விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நேரடி வகுப்புகளுக்கு தடை:
தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பல மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. அரசு பள்ளிகள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை வெளியிட்டு அவற்றை முறையாக பள்ளிகள் கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், பல பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவது அதிச்சியளிக்கும் வகையில் உள்ளது.
தமிழகத்தில் அனைத்து ஞாயிற்று கிழமைகளிலும் தடுப்பூசி முகாம் – மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்!
இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையில், திருநெல்வேலியை சேர்ந்த அப்துல் வஹாபி என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார். அவரது மனுவில், பல பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை முறையாக கடைபிடிக்கப் படாததால் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு நடக்கும் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு இன்று நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் அமர்விற்கு விசாரணைக்கு வந்தது.
TN Job “FB Group” Join Now
மேலும், பல பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வலியுறுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கேட்ட நீதிபதிகள் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் விவரங்களை தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், வழக்கின் விசாரணையை செப்டம்பர் 30ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.