தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – அரசு உத்தரவு!
தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. மேலும் அதிகாரிகள் பணியிட மாறுதல் குறித்த அறிவிப்பை அரசின் உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரிகள்:
தமிழகத்தில் புதிதாக தலைமையேற்றுள்ள அரசு பல்வேறு புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் ஆட்சி பொறுப்பேற்று தொடர்ந்து நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு அதனை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் புதிய அதிகாரிகளை நியமித்து வளர்ச்சிக்கு தேவையான பணிகளை செய்ய உத்தரவிட்டு வருகிறார் முதல்வர்.
தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவது குறித்த முக்கிய அறிவிப்பு!
கடந்த மாதங்களில் கொரோனா பரவல் உச்சத்தை தொட்ட போது மருத்துவ துறையின் செயல்பாடுகளை கவனிக்கவும், மருந்துகள், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இருப்பு போன்றவற்றை ஆராயவும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்பட்டுள்ளனர்.
பணியிட மாற்றம்:
- ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் – தமிழ்நாடு சிறப்புப் படை கமாண்டன்ட் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சென்னை ரயில்வே எஸ்.பி தீபா சத்யன் – ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு சிறப்புப் படை கமாண்டண்ட் இளங்கோ சென்னை ரயில்வே எஸ்.பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
- ராமநாதபுர கடலோரப் பாதுகாப்புக் குழு எஸ்.பி ஜெயந்தி – சேலம் செயலாக்க பிரிவு எஸ்.பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சேலம் செயலாக்கப் பிரிவு எஸ்.பி மகேஷ்குமார் – நில ஆக்கிரமிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு எஸ்.பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- சென்னை பொருளாதார குற்ற பிரிவு ஐஜி கல்பனா நாயக் – சென்னை ரயில்வே ஐஜி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- கல்வி விடுப்பில் இருந்த அபின் தினேஷ் மோதக் – சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.